காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் மின்கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க.வ

காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் மின்கட்டண உயர்வை கண்டித்து  அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

மின் கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் இன்று மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  தமிழகத்தில் மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறார்கள். மின் கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் இன்று மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதே போல் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மின் கட்டண உயர்வினை திரும்ப பெற கோரியும், சொத்து வரி உயர்வினை கண்டித்தும், தேர்தல் நேரத்தில் கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க. அரசை கண்டித்தும் காஞ்சிபுரம் தாலுகா அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் வி. சோமசுந்தரம் தலைமை தாங்கினார். அமைப்புச் செயலாளர்கள் வாலாஜாபாத் பா. கணேசன், மைதிலி திருநாவுக்கரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  ஆர்ப்பாட்டத்தின்போது, மின்கட்டண உயர்வுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் நிர்வாகிகள் காஞ்சி பன்னீர்செல்வம், மதனந்தபுரம் பழனி, கே.யு.எஸ். சோமசுந்தரம், வள்ளிநாயகம், பாலாஜி, தும்பவனம் ஜீவானந்தம், ஜெயராஜ், திலக் குமார், படு நெல்லி தயாளன், கரூர் மாணிக்கம், வாலாஜாபாத் ஹரிகுமார் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பொன்னேரி அண்ணா சிலை அருகில் மாவட்ட செயலாளர் பலராமன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பொன் ராஜா, விஜயகுமார், ஒன்றிய செயலாளர்கள் பிரகாஷ், கோபால் நாயுடு, முத்துக்குமார் நகர செயலாளர் செல்வகுமார், பட்டாபி, எஸ்.டி.டி.ரவி, பா. சங்கர், கவுன்சிலர்கள் சுமித்ரா குமார், பானு பிரசாத், கிருஷ்ணா பிரியா வினோத், செந்தில் குமார், ஸ்ரீதர், டிசி மகேந்திரன், கோளுர் குமார், எம் எஸ் எஸ் சரவணன், மனோஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள டோல்கேட் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சரும், திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளருமான பி. வி.ரமணா தலைமை தாங்கினார். இதில் மாவட்டம், ஒன்றியம், நகரம், கிளைக்கழக திரளான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர். தாம்பரம் சண்முகம் சாலையில் செங்கல்பட்டு மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் ச.ராஜேந்திரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் டி.கே.எம்.சின்னையா, முன்னாள் எம்.எல்.ஏ. கனிதாசம்பத், மாவட்ட துணை செயலாளர் ப.தன்சிங் , என்.சி.கிருஷ்ணன் மாவட்ட மாணவர் அணி செயலாளர் சாந்தகுமார், பகுதி செயலாளர்கள் ஜெயபிரகாஷ், அப்பு வெங்கடேசன், மோகன் கோபிநாதன் ,எல்லார் செழியன், கூத்தன் ஜெகன் வழக்கறிஞர் சதீஸ் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 

Related News