அதிமுக சென்னை புறநகர மாவட்டம், சோழிங்கநல்லூர் வடக்கு பகுதி சார்பில் கட்சியின் வளர்ச்சிக் பணிகள் குறித்தும், உறுப்பினர் உரிமை அட்டை வழங்குவது குறித்தும் செயல்வீரர்கள் வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம், பெருங்குடி தனியார் மண்டபத்தில் சோழிங்கநல்லூர் வடக்கு பகுதி செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ஜீ எம் ஜானகிராமன் தலைமையில் நடைபெற்றது, இக்கூட்டத்தில் கழக இளைஞர் பாசரை மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் வீ பி பி பரமசிவம், சென்னை புறநகர மாவட்ட செயலாளர் கே பி கந்தன் ஆகியோர் பங்கேற்று ஆலோசனைகளை வழங்கி சிறப்புரையாற்றினர், இதில் வட்ட செயலாளர்கள் பிற அணி நிர்வாகிகள் பொது உறுப்பினர்கள் பங்கேற்றனர்,