சொத்து வரி உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் பம்மல் பகுதியில் நடைபெற்ற

சொத்து வரி உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் பம்மல் பகுதியில்  நடைபெற்றது,  செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் மாநகராட்சி 1வது மண்டல அலுவலகம், பொழிச்சலூர் சாலை, கிருஷ்ணா நகர் சாலையில் பம்மல் பகுதி செயலாளரும், முன்னாள் நகரமன்ற துணைச் செயலாளருமான அப்பு என்கின்ற வெங்கடேசன் தலைமையில் சொத்து வரி உயர்வு, மின்கட்டண உயர்வு உள்ளிட்ட விலைவாசி உயர்வுகளைக் கண்டித்து மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இந்த மனித சங்கிலி போராட்டத்தில் பகுதி அவைத் தலைவர் முனுசாமி, மாவட்ட அண்ணா தொழிற்சங்க தலைவர் பிஆர்எஸ்,சரவணராஜ், வட்ட செயலாளர்கள் சொக்கலிங்கம், நெல்லை மணி, சரவணன் உள்பட கட்சியினர் பொதுமக்கள் கலந்துக் கொண்டனர்