தாம்பரம் மாநகர திமுக பெருங்களத்தூர் வடக்கு மற்றும் தாம்பரம் மேற்கு ஆகிய பகுதிகளின் செயல் வீரர்கள் கூட்டம் அவைத்தலைவர்கள் மாமன்ற உறுப்பினர் .T.R.கோபி, V.முனுசாமி ஆகியோர் தலைமையிலும், மண்டல குழு தலைவர்கள், பகுதி கழக செயலாளர்களுமான D.காமராஜ், S.இந்திரன், ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது, இக்கூட்டத்தில் தாம்பரம் மாநகர செயலாளர், தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் S.R.ராஜா பங்கேற்று காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில்,, ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டை வஞ்சித்த பாஜக அரசை கண்டித்து நாளை 27/07/2024 நடைபெறும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில், பங்கேற்பது குறித்து சிறப்புரையாற்றினார், இந்நிகழ்ச்சியில் பகுதி கழக நிர்வாகிகள், மாமன்ற உறுப்பினர்கள், வட்ட செயலாளர்கள், மாநகர அணிகளின் நிர்வாகிகள், வட்ட நிர்வாகிகள் மற்றும் கட்சியினர் பங்கேற்றனர்.