பொன்னேரி அரசு பள்ளியில் எம்.எல்.ஏ. துரை சந்திரசேகர் ஆய்வு

பொன்னேரி அரசு பள்ளியில் எம்.எல்.ஏ.  துரை சந்திரசேகர் ஆய்வு

இதனையடுத்து பொன்னேரி எம்.எல்.ஏ. துரை சந்திரசேகர் பள்ளிக்கு சென்று ஆய்வு செய்து பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் மாணவிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.  பொன்னேரி அடுத்த வேண்பாக்கம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 2000-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் தொடர்ந்து மாணவிகள் பயன்படுத்தும் குடிதண்ணீர், கழிவறை, சாலை வசதி, அடிப்படை வசதி குறித்து பெற்றோர்கள் புகார் தெரிவித்து வந்தனர். இதனையடுத்து பொன்னேரி எம்.எல்.ஏ. துரை சந்திரசேகர் பள்ளிக்கு சென்று ஆய்வு செய்து பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் மாணவிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது மாணவிகள் கழிவறை கதவில் பூட்டு இல்லை எனவும் தண்ணீர் வருவதில்லை எனவும் தெரிவித்தனர். பின்னர் கழிப்பறை வசதி குடிநீர் வசதி, செய்து கொடுப்பதாகவும் பாதாள சாக்கடை திட்டத்தால் தோண்டப்பட்டு மாணவர்கள் செல்வதற்கு வசதி இல்லாமல் இருக்கின்ற சாலையை சீரமைத்து செய்து கொடுப்பதாக தெரிவித்தார். அப்போது நகராட்சி ஆணையாளர் தனலட்சுமி, தலைமை ஆசிரியர் ஆனந்தீஸ்வரி மற்றும் ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.

 

Related News