ஊரப்பாக்கம் ஊராட்சியில் புதிய ரேஷன் கடை திறப்பு வரலட்சுமி மதுசூதனன் ரேஷன் கடையை திறந்து வைத

ஊரப்பாக்கம் ஊராட்சியில் புதிய ரேஷன் கடை திறப்பு  வரலட்சுமி மதுசூதனன்  ரேஷன் கடையை திறந்து வைத்தார்

செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் ஊராட்சி ஐயஞ்சேரி வி.பி.கே. நகரில் புதிய ரேஷன் கடை திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு ஊரப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் பவானி கார்த்தி தலைமை தாங்கினார். ஒன்றிக்குழு தலைவர் உதயா கருணாகரன், ஒன்றியக்குழு துணைத் தலைவர் ஆராமுதன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ரேகா கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அமைப்பாளராக செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் கலந்து கொண்டு புதிய ரேஷன் கடையை வைத்து முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். இதில் ஊராட்சி மன்ற செயலர் கருணாகரன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், தி.மு.க. நிர்வாகிகள், அரசு அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


 

Related News