தாம்பரம் முதல் மேயர் பதவி மு.சித்ராதேவிக்கு அதிக வாய்ப்பு ? - துணை மேயர் பதவியை பெற கூட்டணிக் கட

தாம்பரம் முதல் மேயர்  பதவி மு.சித்ராதேவிக்கு அதிக வாய்ப்பு ? - துணை மேயர் பதவியை பெற கூட்டணிக் கட்சிகள் தீவிரம்

 


தாம்பரம் மாநகராட்சியில் மேயர் வேட்பாளர் யாரென திமுக மேலிடம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்காத நிலையில் ஆதிதிராவிட பெண்கள் வார்டில் திமுக சார்பில் போட்டியிட்டு வென்ற 4-வது வார்டை சேர்ந்த த.சித்ரா, 12-வது வார்டு ம.சத்யா, 13-வது வார்டு ப.ரேணுகாதேவி, 27-வது வார்டு கா.மகேஸ்வரி, 31-வது வார்டு மு.சித்ராதேவி, 51-வதுவார்டு ப.லிங்கேஸ்வரி, 32-வது வார்டு க.வசந்தகுமாரி, 8-வது வார்டு ச.ரம்யா  ஆகியோரின் பெயர்கள் அடிபடுகின்றன. இவர்களில் மு.சித்ராதேவிக்கு  அதிகவாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. அதேபோல் துணை மேயர் பதவிக்கு திமுகவில் கடும் போட்டி எழுந்துள்ளது. துணை மேயருக்கு தாம்பரம் காமராஜ் , குரோம்பேட்டை காமராஜ், ஜோசப் அண்ணாதுரை ஆகியோர் போட்டியிலிருந்தாலும் குரோம்பேட்டை காமராஜூக்கு அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

மேலும், திமுக கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கட்சியினர் துணை மேயர் பதவி கேட்டு வருகிறார்கள். அதேபோல் மமகவும் துணை மேயர் பதவியைக் கேட்டு அழுத்தம் கொடுத்து வருகிறது. இதனால் துணை மேயர் பதவிக்கு திமுக, காங்கிரஸ், மமக இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இதுகுறித்து திமுகவினர் கூறும்போது, தாம்பரம் மாநகராட்சி மேயர் பதவியைப் பிடிக்க 7 பெண்கள் போட்டிக் களத்தில் உள்ளனர். இதில் மு.சித்ராதேவி என்பவருக்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. இவர் கனவர் முரளிதரன் திமுக திருநீர்மலை இளைஞர் அணி அமைப்பு செயலாளர் இருந்து நல்ல திறமையாக பணியாற்றி வருகிறார், இவரின் தந்தை ஏர்போர்ட் ராஜா பல காலமாக கட்சியின் தீவிர விசுவாசியாக இருந்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது. மேலும் மாவட்ட செயலாளரும் தொழில் துறை அமைச்சருமான தா.மோ.அன்பரசன் அவர்களின் அதரவும் இருப்பதால் மேயர் பதவிக்குத் இவருக்கு அதிக வாழ்ப்புள்ளதாக கூறப்படுகிறது.  
மேலும் துணை மேயருக்கு பலரின் பெயர் அடிப்பட்டாலும் குரோம்பேட்டை ஜி.காமராஜுக்கு அதிக வாய்ப்பு உள்ளது. நல்ல நிர்வாகத் திறமை உள்ளவர் என்பதால் அவருக்கு வாய்ப்பு அதிகம்" என அவர்கள் தெரிவித்தனர்.

Related News