தமிழ்மொழி மேம்பாட்டுக்கும் பாடுபடுகிற சான்றோரை சிறப்பிப்பதும் 6 பேருக்கு விடுதலை சிறுத்தைகள

தமிழ்மொழி மேம்பாட்டுக்கும் பாடுபடுகிற சான்றோரை சிறப்பிப்பதும் 6 பேருக்கு விடுதலை சிறுத்தைகள் விருது வழங்கும் விழா

பின்னர் 2008-ம் ஆண்டு முதல் அம்பேத்கர் சுடர் விருதுடன், பெரியார் ஒளி, அயோத்திதாசர் ஆதவன், காமராசர் கதிர், காயிதே மில்லத் பிறை மற்றும் செம்மொழி ஞாயிறு ஆகிய விருதுகளும் பல்வேறு துறைகளில் சாதனைகள் புரிந்த சான்றோருக்கு வழங்கப்பட்டு வருகின்றன.விடுதலை சிறுத்தை விருதுகள் வழங்கும் விழா குறித்து கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. கூறியதாவது:- ஒடுக்கப்பட்ட மக்களின் நலன்களுக்காக பாடுபட்டு வரும் தலித் அல்லாத சான்றோரை போற்றும் வகையில் அம்பேத்கர் பெயரில் 'அம்பேத்கர் சுடர்' என்னும் விருது முதன் முதலில் 2007-ம் ஆண்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வழங்கப்பட்டது. பின்னர் 2008-ம் ஆண்டு முதல் அம்பேத்கர் சுடர் விருதுடன், பெரியார் ஒளி, அயோத்திதாசர் ஆதவன், காமராசர் கதிர், காயிதே மில்லத் பிறை மற்றும் செம்மொழி ஞாயிறு ஆகிய விருதுகளும் பல்வேறு துறைகளில் சாதனைகள் புரிந்த சான்றோருக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த ஆண்டு முதல் மாமேதை கார்ல் மார்க்ஸ் மாமணி விருது புதியதாக வழங்கப்படுகிறது. அவ்விருதுகளை பெறுவோருக்கு பாராட்டு பட்டயம் நினைவு கேடயம் ஆகியவற்றுடன் ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. விளிம்புநிலை மக்களுக்காக பாடுபடுவோரை ஊக்கப்படுத்துவதும், தலித் அல்லாத ஜனநாயக சக்திகளை அடையாளப் படுத்துவதும், தலித் மற்றும் பிற சமூகத்தினருக்கிடையில் நல்லிணக்கத்தை வளர்த்தெடுப்பதும், சமூகநீதிக்கும், தமிழ்மொழி மேம்பாட்டுக்கும் பாடுபடுகிற சான்றோரை சிறப்பிப்பதும் விடுதலை சிறுத்தைகளின் கடமை என்கிற வகையில் இவ்விழா ஆண்டுதோறும் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு ஒருங்கிணைக்கப்பட்டு வருகிறது.

கடந்த 15 ஆண்டுகளில் முன்னாள் முதல்வர் கலைஞர், கேரளா முதல்வர் பினராயி விஜயன், புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி, பொது உடைமை இயக்கத்தின் முதுபெரும் தலைவர் நல்லக்கண்ணு, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 85 சான்றோருக்கு இதுவரை இவ்விருதுகள் அளிக்கப்பட்டுள்ளன. 2022-ம் ஆண்டு விருதுகள் வழங்கும் விழா வருகிற 30-ந்தேதி கலைவாணர் அரங்கத்தில் நடைபெற உள்ளது. இந்த ஆண்டிற்கான விருதுகள் கர்நாடகா முன்னாள் முதல் மந்திரி சித்தராமையா, எழுத்தாளர் எஸ்.வி.ராஜதுரை, வி.ஜி. சந்தோசம், செல்லப்பன், தெகலான் பாகவி, கா.ராசன், மறைந்த எழுத்தாளர் ஜவகர் ஆகியோருக்கு வழங்கப்படுகின்றன. இவ்வாறு அவர் கூறினார். விழாவிற்கு கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி. தலைமை தாங்குகிறார். பொதுச்செயலாளர் துரை.ரவிக்குமார் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். விருதுகள் வழங்கும் விழாவிற்கான ஏற்பாடுகளை கட்சி நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
 

Related News