கொரோனாவுக்கு சிகிச்சை முடிந்து இன்று வீடு திரும்பினார் ஓ.பன்னீர்செல்வம்

ஓ.பன்னீர்செல்வம் ஆஸ்பத்திரியில் இருந்து 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டார். அடையார் வீட்டுக்கு ஓ.பன்னீர்செல்வம் சென்றுள்ளார். அவரை கட்சி நிர்வாகிகள் சென்று பார்த்து உடல் நலம் விசாரித்தனர். முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு கடந்த 15-ந்தேதி கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதையொட்டி சென்னை அமைந்தகரையில் உள்ள எம்.ஜி.எம். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை மேற்கொண்டனர். இதில் அவரது உடல்நிலை தேறி வந்தது. இந்த நிலையில் கடந்த 18-ந்தேதி ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க தலைமை செயலகத்துக்கு கவச உடையுடன் சென்றிருந்தார். அங்கு வாக்களித்து விட்டு மீண்டும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவ வல்லுனர்கள் அடங்கிய குழுவினர் அவரது உடல்நிலையை கண்காணித்து வந்தனர். மீண்டும் அவருக்கு கொரோனா டெஸ்ட் எடுத்து பார்க்கப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா இல்லை என்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து இன்று ஓ.பன்னீர்செல்வம் ஆஸ்பத்திரியில் இருந்து 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டார். அடையார் வீட்டுக்கு ஓ.பன்னீர்செல்வம் சென்றுள்ளார். அவரை கட்சி நிர்வாகிகள் சென்று பார்த்து உடல் நலம் விசாரித்தனர்.


 

Related News