கட்சி மாறினால் வீடு தேடி வெட்டுவேன் என பேசியவருக்கு மாடியில் இருந்து குதித்ததில் கால் முறிவு!

 

கட்சி மாறினால் வீடு தேடி வெட்டுவேன் என பேசியவருக்கு மாடியில் இருந்து குதித்ததில் கால் முறிவு! 
கட்சி மாறினால் வீடு தேடி வெட்டுவேன் என பேசிய அதிமுக ஒன்றிய செயலாளர் சண்முககனியை கைது செய்ய முயன்றபோது மாடியில் இருந்து குதித்ததில் கால் முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அதன்படி, கடந்த 28ம் தேதி விருதுநகர் மாவட்டம்,சாத்தூரில் நடைபெற்ற அதிமுக ஆலோசனை கூட்டத்தில் அதிமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் சண்முகக்கணி கட்சியினர் மத்தியில் பேசினார். அப்போது,  “அதிமுகவில் போட்டியிட்டு வெற்றி பெற்றுவிட்டு கட்சி மாறி போனால் அவனை வீடு தேடி வெட்டுவேன்.

மாவட்ட செயலாளரிடம் சொல்லிவிட்டு வெட்டுவேன், என் வெட்டு முதல் வெட்டாக இருக்கும், உங்கள் பிரேத பரிசோதனை அரசு மருத்துவமனையில்தான் இருக்கும்” என கட்சியினரை மிரட்டும் வகையில் பேசியதை பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆளுநர் நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பியதை தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில், திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள்,மதிமுக, பாமக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி,கொங்குநாடு கட்சி உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றன. பாஜக, அதிமுக கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

Related News