ஆந்திர மாநிலம் நெல்லூரில் இருந்து உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ரூ.19 லட்சம் பணம், 32 கிலோ வெ

 

ஆந்திர மாநிலம் நெல்லூரில் இருந்து உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ரூ.19 லட்சம் பணம், 32 கிலோ வெள்ளி கட்டிகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் அருகே எளாவூர் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியில் கும்மிடிப்பூண்டி சரக காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று (ஆக.10) அவ்வழியாக சந்தேகத்திற்கிடமாக வந்த சொகுசு காரை மறித்து காவல் துறையினர் சோதனை செய்தனர். அப்போது உரிய ஆவணம் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ.19 லட்சம் பணம், 32 கிலோ வெள்ளிக் கட்டிகளை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.விசாரணையில் காரை ஓட்டி வந்தவர் சேலத்தைச் சேர்ந்த நகை வியாபாரி அருண் (49) என்பதும், அவர் ஆந்திர மாநிலம் நெல்லூரில் இருந்து வெள்ளிக் கட்டிகளை விற்பனைக்காக வாங்கி வந்ததும் தெரியவந்தது.தற்போது அவரை கைது செய்த காவல் துறையினர் அடுத்த கட்ட விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்

Related News