திருப்­பெ­ரும்­பு­தூர் தெற்கு ஒன்­றி­யம் மற்­றும் பேரூர் திமுக சார்­பில் பொது உறுப்­பி­னர்­கள்

திருப்­பெ­ரும்­பு­தூர் தெற்கு ஒன்­றி­யம் மற்­றும் பேரூர் திமுக சார்­பில் பொது உறுப்­பி­னர்­கள் கூட்­டம் நடைபெற்றது, இக்கூட்டத்தில் மாற்று கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர், காஞ்சிபுரம் மாவட்டம், திமுக காஞ்­சி­ வடக்கு மாவட்­டம் திருப்­பெ­ரும்­பு­தூர் தெற்கு ஒன்­றி­யம் மற்­றும் திருப்­பெ­ரும்­பு­தூர் பேரூர் கழகம் சார்­பில், தெற்கு ஒன்­றி­யக் கழ­கச் செய­லா­ளர் நா கோபால் தலைமையில் பொது உறுப்­பி­னர்­கள் கூட்­டம் தி­ருப்பெ­ரும்­பு­தூர் தனியார் மண்டபத்தில் நடை­பெ­ற்றது, 
இக்கூட்­டத்­தில் பேரூர் கழ­கச் செய­லா­ளர் ரா சத்தீஷ்குமார் வர­வேற்புரையாற்றினார், இதில் மாவட்­டக் கழ­கச்­ செ­ய­லா­ளர் அ­மைச்­சர் தாமோ அன்­ப­ர­சன் பங்கேற்று ஆலோ­சனை வழங்கி சிறப்­பு­ரை­யாற்­றினார், இதில் ஜனநாயக குடியரசு கட்சியை சேர்ந்த நூற்றக்கும் மேற்பட்டோர் அக்கட்சியின் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் குணசேகரன் தலைமையில் தாமோ அன்பரசன் முன்னிலையில் இணைந்தனர்,  இக்கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள், மாவட்ட, பகுதி, வட்டம், பிற அணியினர் கட்சி தொண்டர்கள் பலர் கலந்துக் கொண்டனர்,