திருப்பெரும்புதூர் தெற்கு ஒன்றியம் மற்றும் பேரூர் திமுக சார்பில் பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது, இக்கூட்டத்தில் மாற்று கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர், காஞ்சிபுரம் மாவட்டம், திமுக காஞ்சி வடக்கு மாவட்டம் திருப்பெரும்புதூர் தெற்கு ஒன்றியம் மற்றும் திருப்பெரும்புதூர் பேரூர் கழகம் சார்பில், தெற்கு ஒன்றியக் கழகச் செயலாளர் நா கோபால் தலைமையில் பொது உறுப்பினர்கள் கூட்டம் திருப்பெரும்புதூர் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது,
இக்கூட்டத்தில் பேரூர் கழகச் செயலாளர் ரா சத்தீஷ்குமார் வரவேற்புரையாற்றினார், இதில் மாவட்டக் கழகச் செயலாளர் அமைச்சர் தாமோ அன்பரசன் பங்கேற்று ஆலோசனை வழங்கி சிறப்புரையாற்றினார், இதில் ஜனநாயக குடியரசு கட்சியை சேர்ந்த நூற்றக்கும் மேற்பட்டோர் அக்கட்சியின் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் குணசேகரன் தலைமையில் தாமோ அன்பரசன் முன்னிலையில் இணைந்தனர், இக்கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள், மாவட்ட, பகுதி, வட்டம், பிற அணியினர் கட்சி தொண்டர்கள் பலர் கலந்துக் கொண்டனர்,