பேரறிஞர் அண்ணா அவர்களின் 116 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கி

பேரறிஞர் அண்ணா அவர்களின் 116 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினர். செங்கல்பட்டு மாவட்டம், திமுக காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் தாம்பரம் மாநகரம் சார்பில் தாம்பரம் பேருந்து நிருத்தம் அருகில் உள்ள அம்பேத்கார் சிலை அருகில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 116 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் S R ராஜாஅவர்களின் ஆலோசனைக்கிணங்க, 4வது மண்டல குழு தலைவரும், பெருங்களத்தூர் வடக்கு பகுதி செயலாளருமான D காமராஜ் மற்றும் 5வது மண்டல குழு தலைவரும், தாம்பரம் மேற்கு  பகுதி செயலாளருமான S இந்திரன் ஆகியோர் பங்கேற்று அலங்கரிக்கப்பட்ட அவரது திரு உருவ படத்திற்க்கு  மலர்கள் தூவி வணங்கினர், இதில் பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினர். இந்நிகழ்ச்சியில்  மாமன்ற உறுப்பினர்கள், பகுதி கழக நிர்வாகிகள், வட்ட செயலாளர்கள், அணிகளின் நிர்வாகிகள், கட்சியினர் பொது மக்கள் பங்கேற்றனர்.