முப்பெரும் விழா மற்றும் பவள விழா, விஷ்ணுகுமார் நினைவு கல்வெட்டு திறப்பு விழா

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் மாநகராட்சி பெருங்களத்தூர் வடக்கு பகுதி 50வது வட்ட திமுக சார்பில் முப்பெரும் விழா மற்றும் பவள விழாவை முன்னிட்டு கே எஸ் இராமையா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் பன்னீர்செல்வம் என்று பெயர் சூட்டப்பட்ட பி விஷ்ணுகுமார் நினைவு கல்வெட்டு திறப்பு விழா தாம்பரம் மாநகர கழக செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்ஆர் ராஜா அவர்கள் ஆணைக்கிணங்க மாநகர வர்த்தக அணி துணை அமைப்பாளர் ரா செல்வகுமார் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மண்டல குழு தலைவரும் பகுதி செயலாளருமான D காமராஜ் மற்றும்  மண்டலக் குழுத் தலைவர்  எஸ் இந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு புதிய கொடி கம்பம் மற்றும் கல்வெட்டு திறந்து வைத்து கட்சி கொடி ஏற்றி  இனிப்புகள் வழங்கி கொண்டாடினர், இந்நிகழ்ச்சியில் தாம்பரம் மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கும், பொதுமக்களுக்கும்  நலத்திட்ட உதவிகள் வழங்கினர், உடன் மாநகர கழக அணிகளின் அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள், பகுதி கழக நிர்வாகிகள், வட்ட கழக செயலாளர்கள், மாமன்ற உறுப்பினர்கள், இளைஞர் அணி, மாணவரணி, மகளிர் அணி மற்றும் கட்சித் தோழர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.