திருப்போரூர் கந்தசுவாமி கோயிலுக்கு சொந்தமான ரூ.81.15 கோடி மதிப்புள்ள 16.23 ஏக்கர் நிலத்தை கோயில் நி

 

 

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் கந்தசாமி கோயில் மற்றும் மாமல்லபுரம் ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமாக பல கோடி ரூபாய் மதிப்பில் 2,000 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலங்களை சிலர் அபகரிக்க முயல்வதாக வழக்கறிஞர் ஒருவர், கடந்தாண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.கோயில் நிலம் அளவீடுஅதன் நடவடிக்கையாக கோயில் மற்றும் அறக்கட்டளை நிலங்களை ஆய்வு செய்யும்படி, செங்கல்பட்டு ஆட்சியருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.இதில் மாமல்லபுரம் ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான நிலம் அளவீட்டு பணி, முடியும் தருவாயில் உள்ளது. அதேபோல் திருப்போரூர் கந்த சுவாமி கோயிலுக்கு சொந்தமான நிலங்களில் ஒரு மாதமாக வருவாய் துறையினர், கோயில் நிர்வாகத்தினர் அளவீடு செய்து வருகின்றனர்.அமைச்சர் சேகர்பாபு ஆய்வுஇந்நிலையில், கடந்த 29ஆம் தேதி இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு திருப்போரூர் கந்த சுவாமி கோயிலுக்கு வந்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது கோயில் செயல் அலுவலர் சக்திவேலிடம் ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்பட்டதா? எனக் கேட்டார்.நிலங்களை மீட்க உத்தரவுஅதற்கு அவர் 80 விழுக்காடு வரை மீட்கப்பட்டதாகவும் இன்னும் 40 ஏக்கருக்கு மேல் நிலங்கள் மீட்க வேண்டும் எனவும் தெரிவித்தார். அதற்கு அமைச்சர் அதனை உடனடியாக மீட்கும்படி உத்தரவிட்டார்.கோயில் நிலம் ஆக்கிரமிப்புதிருப்போரூர்– நெம்மேலி சாலை, புதிய ஆறுவழி சாலை அருகே உள்ள சர்வே எண்கள்: 183, 6, 10, 131, 40, 21 இல் உள்ள பல்வேறு நிலங்களை சிலர் ஆக்கிரமித்துள்ளனர்.தற்போது 6 வழி சாலை பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு வருவதால், கந்தசாமி கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் அதிக விலைக்கு விற்பதற்கு அவர்கள் ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.நிலம் மீட்புஇந்நிலையில் கோயில் நிர்வாகம் சார்பில் திருப்போரூர் கந்தசாமி கோயிலுக்கு சொந்தமான 16.23 ஏக்கர் நிலங்களை கோயில் செயல் அலுவலர் சக்திவேல், மேலாளர் வெற்றிவேல் ஆகியோர் கோயில் பணியாளர்கள் உதவியுடன் மீட்டனர்.பின்னர் கோயிலுக்கு சொந்தமான இடம், ஆக்கிரமிப்போர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிப்பு பலகை வைத்தனர். மீட்கப்பட்ட நிலங்களின் மதிப்பு ரூ.81.15 கோடி இருக்கும் எனக் கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

Related News