பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய 63 வயது முதியவர்- போக்சோ சட்டத்தில் கைது

பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய 63 வயது முதியவர்- போக்சோ சட்டத்தில் கைது

திருவள்ளூர் மாவட்டம்

; திருநின்றவூர் அடுத்த பாக்கம் பகுதியில் உள்ள 16 வயதான சிறுமி வேப்பம்பட்டில் உள்ள பள்ளியில் 11- ம் வகுப்பு படித்து வருகிறார். இந்தநிலையில் மாணவியின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த பெற்றோர் அவரிடம் விசாரித்தபோது 3 மாத கர்ப்பமாக இருப்பது தெரிந்தது. அதே பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளியான பலராமன்(63) என்பவர் ஆசைவார்த்தை கூறி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கி இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மாணவியின் கர்ப்பத்தை கலைப்பதற்காக திருவள்ளூவர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இதனை அறிந்த டாக்டர்கள் இதுகுறித்து ஆவடி மகளிர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் விரைந்து வந்து மாணவி மற்றும் அவரது பெற்றோரிடம் விசாரணை நடத்தினர். இதையடுத்து மாணவியை கர்ப்பமாக்கிய முதியவர் பலராமனை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

Related News