சார்பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி- பா.ஜனதாவினர் 50 பேர் கைது

சார்பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி- பா.ஜனதாவினர் 50 பேர் கைது, இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்

தூத்துக்குடி மாவட்ட கோவில்பட்டியில் சார்பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் முறைகேடுகள் அதிகமாக நடைபெற்று வருவதாக பா.ஜ.க.வினர் குற்றம் சாட்டி வந்தனர். இந்நிலையில் கோவில்பட்டியில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் முறைகேடுகளை கண்டித்து வடக்கு மாவட்ட தலைவர் வெங்கடேசன் சென்னகேசவன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட பா.ஜ.க.வினர் சார்பதிவாளர் அலுவலகத்தினை முற்றுக்கையிட வந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதைத்தொடர்ந்து அவர்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து அவர்களை கைது செய்த போலீசார் குண்டு கட்டாக தூக்கி வேனில் ஏற்றிய தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர். மேலும் சார் பதிவாளர் அலுவலகம் முன்பு 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.