வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த திமுக வேட்பாளர் குத்தாட்டம் போட்டு வேட்பு மனு தாக்கல் செய்தார்

வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த திமுக வேட்பாளர் குத்தாட்டம் போட்டு வேட்பு மனு தாக்கல் செய்தார்
வந்தவாசியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு 24 வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த திமுக வேட்பாளர் மயிலாட்டம் ஒயிலாட்டம் பேண்ட் வாத்தியத்துடன் குத்தாட்டம் போட்டு வேட்பு மனு தாக்கல் செய்தார். வாக்குப்பதிவு வரும் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. 
இதனை அடுத்து, அனைத்து கட்சியினரும் தங்களது வேட்பாளர்களை அறிவித்து உள்ளனர்.இந்த நிலையில் வேட்புமனுத்தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்றது. வேட்பு மனு தாக்கல் செய்ய இறுதி நாளான நேற்று  வந்தவாசி நகராட்சியில் உள்ள 36 வார்டுகளில் போட்டியிடுவதற்கு வேட்பு மனுத்தாக்கல்   களைகட்டியது.