வில்லிவாக்கம் ஒன்றியம் மோரை ஊராட்சியில் கிராம சபைக் கூட்டதில் கழிப்பறை கட்டி பயன்படுத்தும்

வில்லிவாக்கம் ஒன்றியம் மோரை ஊராட்சியில் கிராம சபைக் கூட்டதில் கழிப்பறை கட்டி பயன்படுத்தும் குடும்பங்களுக்கு பாராட்டு தெரிவித்தனர்
அக்டோபர் 2 காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராமசபைக் கூட்டம் வில்லிவாக்கம் ஒன்றியம் மோரை ஊராட்சியில் உள்ள சமுதாய நல கூடத்தில் நடைபெற்றது. இதில் திறந்த வெளியில் மலம் கழிக்கும் பழக்கத்தை மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கழிப்பறை கட்டி பயன்படுத்தும் குடும்பங்களுக்கு பராட்டடு தெரிவித்து அவர்களை ஊக்கவித்தனர். மேலும் குப்பைகளை தெருக்களில் வீசாமல் வீடுகளுக்கே வரும் தூய்மை பணியாளர்களிடம் பிரித்து கொடுத்தால் அதை திடக்கழிவு மேலாண்மை திட்டம் மூலம் உரமாக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும் போன்ற சிறப்பு திட்டங்கள் குறித்து விவாதித்தனர். இக்கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் ஆர். திவாகர், ஊரக வட்டார வளர்ச்சி அலுவலர் , ஊராட்சி செயலர்  மற்றும் வார்டு ஊறுப்பினர்கள், நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள்

பங்கேற்றனர்.