கர்ண பத்மாசனத்தில் தொடந்து 10 நிமிடங்கள் நின்று யோகா ஆசிரியை புதிய உலக சாதனை

 


திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி பகுதியைச் சேர்ந்த சூரியநாராயணன் - புஷ்பலதா தம்பதியர் மகள் சந்தியா (24). யோகா பயிற்சி ஆசிரியரான சந்தியா, அதே பகுதியில் 8 ஆண்டுகளாக ஸ்ரீ சங்கரி யோகா பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் நடத்தி வருகிறார்.

இவர் கர்ண பத்மாசனத்தில் தொடர்ந்து 10 நிமிடங்கள் நின்று புதிய உலக சாதனை படைத்தார். இதன் மூலம் இந்தியா புக் ஆப் ரெக்கார்டு, நோபல் உலக சாதனை புத்தகங்களில் இடம் பிடித்துள்ளார். அப்பகுதி மக்கள் சந்தியாவை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த யோகா ஆசிரியை புதிய உலக சாதனைஇவர் தேசிய, சர்வதேச அளவிலான யோகா போட்டிகளில் சாதனை படைத்துள்ளார். கடந்த 2010 ஆம் ஆண்டு, சிங்கபூரில் நடைபெற்ற காமன்வெல்த் யோகா போட்டில் தங்கம் வென்றவர். போதி தர்மர், திருமூலர் உள்ளிட்ட ஏராளமான விருதுகளை பெற்றவர். இவரிடம் பயிற்சி பெற்று வரும், 10 மாணவர்கள் யோகாவில் உலக சாதனை படைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.