கோயில் குளத்தில் மூழ்கி ஐந்து பெண்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து காவல் த

 

திருவள்ளூர்: புது கும்மிடிப்பூண்டியில் உள்ள சீதம்மாள் தெருவைச் சேர்ந்த மூன்று சிறுமிகள் உள்பட ஐந்து பெண்கள் சுமதி (35), அஸ்விதா (15), ஜீவிதா (14), நர்மதா (11), ஜோதிலட்சுமி (30) ஆகிய ஐந்து பேர் துணி துவைக்க சென்றுள்ளனர்.இதில் மூன்று சிறுமிகள் கோயில் குளத்தில் இறங்கி விளையாடிக்கொண்டிருந்தபோது ஆழமான பகுதிக்கு சென்றுள்ளனர். 

அப்போது திடீரென நீருக்குள் மூழ்கி தத்தளித்தனர்.கோயில் குளத்தில் மூழ்கி மூன்று சிறுமிகள் உள்பட 5 பெண்கள் உயிரிழப்புஊருக்குள் நடந்த சோகம்இவர்களை காப்பாற்ற சென்ற இரண்டு பெண்களும் நீரில் மூழ்கி சம்பவ இடத்திலேயே ஐந்து பேர் உயிரிழந்தனர். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் காவல் துறையினருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் அளித்த தகவலின் அடிப்படையில் விரைந்துவந்து சுமார் அரை மணி நேர தேடுதலுக்கு பின் ஐந்து பேரின் உடல்களை மீட்டு, பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பிவைத்தனர். இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.