ஆந்திராவில் இருந்து வரும் நெல்மூட்டை வாகனங்களுக்கு அனுமதி இல்லை!

 

 

ஆந்திராவில் இருந்து நெல்லை மூட்டைகளுடன் வரும் வாகனங்களை திருவள்ளூர் மாவட்டத்திற்குள் அனுமதிக்க வேண்டாம் என அரசு அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர்: கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் உணவுத்துறை அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் நடைபெற்றது. இதில், கலந்துகொண்ட உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 
"தமிழ்நாட்டில் உள்ள நியாய விலைக் கடைகளில் பொதுமக்கள் புகார் அளிக்க வசதியாக புகார் புத்தகம் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். குடும்பத் தலைவிக்கு மாதம் ஆயிரம் ரூபாய் அளிக்கப்படும் என்ற திட்டத்தை நிதி நிலையை கருத்தில் கொண்டு முதலமைச்சர் அறிவிப்பார். பொதுமக்களிடம் நியாய விலைக்கடை ஊழியர்கள் கனிவுடன் நடந்துகொள்ளவேண்டும்.

Related News