கண்டோன்மென்ட் நகரத்தில் தண்ணீர் பந்தல் திறப்பு
கோடை வெப்பத்தை தனிக்க அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் பல்லாவரம் பரங்கிமலை ஒன்றியம் கண்டோன்மென்ட் நகரத்தில் தண்ணீர் பந்தல் திறப்பு
காஞ்சிபுரம் கிழக்கு மாவட்டம் அம்மா மக்கள் முன்னேற்ற கழக சார்பில் பரங்கமலை ஒன்றியம் கண்டோன்மென்ட் நகரம் பகுதியில் நகர கழக செயலாளர் மவுன்ட் கோபால்சாமி ஏற்பாட்டில் தாகம் தீர்க்கும் தண்ணீர் பந்தல் மாவட்ட கழக செயலாளர் ம.கரிகாலன் திறந்து வைத்தார். இதில் நீர் மோர் தர்பூசனி, வெள்ளரிக்காய் போன்ற குளிர்பானங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகளை பொதுமக்களுக்கு வழங்கினர். இந்நிகழ்ச்சியின்போது மாற்று கட்சியினர் ஏறாளமானோர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் ம.கரிகாலன் தலைமையில் இணைந்தனர். உடன் ஒன்றிய கழக செயலாளர் கு காளிதாஸ், ஆலந்தூர் பகுதி கழக செயலாளர் ஏ.என். லட்சுமிபதி, பழனிவேல், இருதயராஜ்,ஜெயகாந்தன், நகேந்திரன்,வெங்கட்ராமன் உட்பட கட்சியினர் ஏறாளமானோர் பங்கேற்றனர்.