காங்கிரஸ் கட்சிக்குள் அச்சமில்லாத ஆள்களை கொண்டுவாருங்கள், அச்சத்தோடு கட்சிக்குள் இருப்பவர்

 

 

காங்கிரசின் சமூக வலைதள ஆதரவாளர்களை காங்கிரஸ் எம்பி ராகுல் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், காங்கிரஸ் கட்சிக்கு திறமையான, அச்சமற்ற ஆள்கள் தேவை எனத் தெரிவித்தார்."கட்சிக்கு வெளியில் பயம் அறியா ஆள்கள் இருக்கின்றனர். அவர்களைக் கட்சிக்குள் கூட்டி வாருங்கள். 
அதேசமயம் கட்சிக்குள்ளேயே பலர் அஞ்சிக்கொண்டிருக்கின்றனர். அவர்கள் வெளியேறட்டும். நமக்கு அச்சமில்லாத ஆள்களே தேவை. அதுவே நம்முடைய சித்தாந்தம்" என்றார்.மேலும் பேசிய அவர், "கரோனா தொற்றின்போது உத்தரப் பிரதேச நல்ல வேலையைச் செய்துள்ளது. சீனா நம் எல்லைக்குள் நுழையவில்லை, பிரதமர் மோடி கூறியபோது, மக்கள் அவரைப் பார்த்து சிரித்தார்கள்" என்றார்.

Related News