மேற்கு வங்க மாநிலத்தில் பணியாற்றி வந்த பெரம்பலூரைச் சேர்ந்த ராணுவவீரர் மாரடைப்பால் உயிரிழந்


பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் அருகேயுள்ள காரை கிராமத்தைச் சேர்ந்தவர், சங்கர். இவர் கடந்த 23 ஆண்டுகளாக ராணுவத்தில் பணிபுரிந்து வந்தார். கடந்த 50 நாட்களுக்கு முன்பு விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த இவர், மேற்கு வங்கத்தில் பணிபுரிந்து வந்தார். நாட்டிற்காக மேற்கு வங்கத்தில் அயராது உழைத்து வந்த சங்கர், இன்று (ஜூலை 11) மாரடைப்பால் உயிரிழந்தார். அவர் பணியின்போது மாரடைப்பால் உயிரிழந்ததாக ராணுவ அலுவலர்கள் சங்கரின் குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவித்தனர்.உயிரிழந்த ராணுவ வீரருக்கு விஷால், ரித்தியான் என்ற இரு மகன்கள் உள்ளனர். ராணுவ நடைமுறைகள் முடிந்த பின், ராணுவ வீரரின் உடல் பெரம்பலூர் மாவட்டத்திற்கு கொண்டு வந்து, அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும்.