ரோந்து காவலர் விசாரித்த போது, பீர் பாட்டிலை உடைத்து ஆட்டோ ஓட்டுநர் கழுத்தை அறுத்துக்கொண்டு உய

 

 

சென்னை: அம்பத்தூர் எஸ்டேட் ஐசி.எப் காலனி பகுதியை சேர்ந்தவர் பாக்கியராஜ் (32). ஆட்டோ ஓட்டுநரான இவருக்கு அபிராமி என்ற மனைவியும், மூன்று வயதில் குழந்தையும் உள்ளனர்.இந்நிலையில் பாக்கியராஜ் இன்று (ஜூலை.12) காலை 11 மணியளவில் தனது நண்பர் பிரதீப்புடன் ஆட்டோவில் அயப்பாக்கம் பகுதியிலுள்ள ஜேஹூமர் மேல்நிலைப் பள்ளி அருகே உள்ள காலியான பகுதிக்கு சென்று மது அருந்தியதாகக் கூறப்படுகிறது.

ரோந்து காவலருடன் வாக்குவாதம்அப்போது அவ்வழியாக சென்ற ரோந்து காவலர் சந்தோஷ் பொது இடத்தில் ஏன் குடிக்கிறீர்கள் எனக் கேட்டு, உடனடியாக கிளம்புமாறு சொன்னதாகக் கூறப்படுகிறது.மேலும் இருவரையும் புகைப்படம் எடுத்துவிட்டு முகவரியைக் காவலர் கேட்டபோது, அவருடன் பாக்கியராஜ் வாக்குவாதத்தில் ஈடுபடத் தொடங்கியுள்ளார்.பீர் பாட்டிலால் கழுத்தை அறுத்து தற்கொலைஅப்போது, திடீரென கையில் வைத்திருந்த பீர் பாட்டிலால் பாக்கியராஜ் தனது கழுத்தை அறுத்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
தொடர்ந்து, ரத்த வெள்ளத்தில் கிடந்த பாக்கியராஜை காவலர் சந்தோஷும், அவரது நண்பர் பிரதீப்பும் இணைந்து தனியார் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர், அவர் மேல் சிகிச்சைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.தற்கொலைக்கு தூண்டினாரா காவலர்?தொடர்ந்து, தகவலின் பேரில் மருத்துவனைக்கு வந்த பாக்கியராஜின் மனைவி அபிராமி உள்பட உறவினர்கள் அனைவரும், காவலரின் தூண்டுதலின் பேரிலேயே பாக்கியராஜ் கழுத்தை அறுத்துக் கொண்டதாகக் கூறி, உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அபிராமி, "எனது கணவர் இயற்கை உபாதை செல்வதற்காக இன்று காலை அயப்பாக்கம் பகுதிக்கு நண்பருடன் ஆட்டோவில் சென்றார். 
அப்போது அங்கு வந்த ரோந்து காவலரான சந்தோஷ் குடிப்பதற்காக இங்கு வந்தீர்களா எனக்கூறியதால் பாக்கியராஜ் காவலருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.ஐபோனுக்காக தற்கொலைமேலும், தனது கணவர் ஆசையாக வாங்கிய ஐபோனை காவலர் சந்தோஷ் பிடுங்கியுள்ளார். அப்போது, செல்போனை தராவிட்டால் பீர் பாட்டிலால் அறுத்து கொள்வேன் என மிரட்டியுள்ளார்.அதற்கு முடிந்தால் அறுத்துக்கொள் என காவலர் கூறியதால் தான் சந்தோஷ் கழுத்தை அறுத்துக் கொண்டதாக குற்றம்சாட்டினர்.
ஒரு மரணத்தில் இரண்டு விதமான தகவல்மேலும் தனது கணவர் கழுத்தை அறுத்துக் கொண்டதையும் பொருட்படுத்தாமல் காவலர் சென்றுவிட்டதாகவும் உறவினர்கள் கூறுகின்றனர்.இந்தத் தற்கொலை தொடர்பாக திருமுல்லைவாயில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து பாக்கியராஜின் நண்பர் பிரதீப்பிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் இச்சம்பவம் குறித்து காவலர் சந்தோஷிடம் துறை ரீதியான விசாரணை நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.

Related News