செங்கல்பட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய ஊரக தொழிற்துறை அமைச்சர் தா.மோ அன்பரசன்

 

 

செங்கல்பட்டு: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின் பேரில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா செங்கல்பட்டு மருத்துவக்கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஊரக தொழிற்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் பங்கேற்று, 137 பயனாளிகளுக்கு வீட்டு மனைப்பட்டா, இலவச சலவைப்பெட்டி, குடும்ப அட்டை, மருத்துவ காப்பீடு அட்டை, பசுமை வீடு, வேலையில்லா நபர்களுக்கு உதவித்தொகை, கல்வி உதவித் தொகை என 3 கோடியே 21 லட்சத்து 31ஆயிரத்து 937 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத், நாடாளுமன்ற உறுப்பினர்கள் செல்வம், தமிழச்சி தங்கப்பாண்டியன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் வரலட்சுமி மதுசூதன், பனையூர் பாபு, பாலாஜி மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Related News