கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியின் நிதிநிலைமை குறித்த வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல்

 

 

நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்ட வெள்ளை அறிக்கையின் முக்கிய அம்சங்கள் என்னென்ன என்பது குறித்து பார்ப்போம்:
2019 -20 ஆம் ஆண்டு வருவாய் பற்றாக்குறை அளவு 35 ஆயிரத்து 950 கோடியாக இருந்தது.2020 - 21 ஆம் ஆண்டு வருவாய் பற்றாக்குறை 61,320 கோடி ஏற்பட்டுள்ளது.பத்தாண்டுகளில் கடன் பெற்று அரசு ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.கடன் பத்திரம் மூலம் திரட்டிய நிதியை வைத்து ஏற்கனவே வாங்கிய கடனுக்கான வட்டியை செலுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.அரசின் மொத்த பொதுக்கடன் 2021 மார்ச் 31 ஆம் தேதி வரை 5 லட்சத்து 70 ஆயிரத்து 189 கோடி.கடந்த 10 ஆண்டுகளில் அரசின் வருவாய் வளர்ச்சி குறைந்து கொண்டே வருகிறது. கடந்த 2006 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8.4 விழுக்காடு இருந்து. 2020 - 21 ஆம் ஆண்டில் வெறும் 5.46 விழுக்காடு இருந்தது.மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வரி வருவாய் வளர்ச்சி சரிந்து 3 விழுக்காடு என்ற மதிப்பில் உள்ளது.தமிழ்நாட்டின் வர்த்தக வாகன வரி வருவாய் கர்நாடகா, கேரளா மாநில விட குறைவு.சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் மீதான வரி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.2020 - 21 ஆம் ஆண்டு பெட்ரோல் மற்றும் டீசல் மீது விதிக்கப்பட்ட அதிக வரிகள் மூலம் 3 லட்சத்து 89 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டியது. ஆனால் வெறும் 837 கோடி ரூபாய் மட்டுமே தமிழ்நாட்டிற்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சித் திட்டங்களுக்கான செலவினங்களில் 5.4 விழுக்காடு குறைந்துள்ளது.உள்ளாட்சி அமைப்புகளுக்கு உரிய நேரத்தில் தேர்தல் நடக்காத காரணத்தினால் அரசின் மானியங்களை முழுமையாக பெற முடியாமல் உள்ளாட்சி அமைப்புகள் செயல் திறன் மிகவும் பாதிப்படைந்து.தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் மற்றும் மின் வாரியத்தின் ஒட்டுமொத்த கடன் ரூ.2 லட்சம் கோடி.சென்னை மாநகர் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மொத்த கடன் ரூபாய் 5 ஆயிரத்து 282 கோடியாக உள்ளது.முறையற்ற நிர்வாகத்தினாலும் மோசமான நிதி மேலாண்மையினாலும், போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் இயக்கம் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் 59 ரூபாய் இழப்பு ஏற்படுகிறது.தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களுக்கு ஏற்படும் தினசரி இழப்பு ரூ.15 கோடி.மின் வாரியம் கடந்த 10 ஆண்டுகளாக மின்சாரத்தை அதிக விலையில் வாங்குவதும் சொந்த உற்பத்தி நிலையங்களில் உற்பத்தி அதிகரிக்காலும் ரூ.2.36 இழப்பு ஏற்படுகிறது. தமிழ்நாட்டில் மின்சார வாரியத்தில் தினசரி இயக்க இழப்பு ரூ.55 கோடி.தமிழ்நாடு பெற்றுள்ள கடனுக்கான தினசரி செலுத்தும் வட்டி தொகை ரூ.115 கோடி.பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் பிற நிறுவனங்கள் தினசரி செலுத்தும் வட்டி தொகை ரூ.180 கோடி.ஒவ்வொரு குடிமகனும் ஓராண்டு செலுத்தும் வட்டி தொகை ரூ.7,700 உள்ளது.ஒவ்வொரு குடிமகன் மீதும் மொத்த கடன், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் வெளியில் தெரியாத கடன் உள்பட 1 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் உள்ளது.தமிழ்நாட்டில் ஒரு குடும்பத்தின் தலையில் பொது சந்தா கடன் மட்டும் ரூ.2,63,976 ஆக இருக்கிறது.

Related News